பலஹத்துறைப் பள்ளிவாசல் மினி சூராவளியால் சேதம்!
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzg1L51ZN9mRhpYmF-L2BYpEzRBZRtXtT7kLwIOqDlHcRknPHfKL_bwliK24qhsGaKfaDX5m7AK2cU7fl3SXFfzVWrqrG-QKKBa9x-u5nc_8R4dRp0d_Uuddvdt2-LksnkTmCfX9MOLJY/s200/MOSQUE-6.jpg)
கம்பஹ மாவட்டத்தில் உள்ள பலகத்துறை முஸ்லிம் கிராமத்தில் நேற்று (11) செவ்வாய்க் கிழமை வீசிய மினி சூறாவளியால் பெரிய பள்ளிவாசலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஓடுகள் காற்றில் பறந்தன. சீலின், முன் கதவு, யன்னல் மினாரா உச்சியில் அமைந்திருந்த பிறை நட்சத்திரம் எனபவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பெரியபள்ளி மையவாடியையும் கடற்பரப்பையும் பிரிக்க அமைக்கப்பட்டுள்ள தூண்களில் இரண்டு காற்றின் அகோரத்தில் விழுந்துள்ளதோடு தேங்காய்களும் வீழ்ந்தன. ஊர் மக்கள் உடனடியாக ஒன்று சேரந்து திருத்த வேலைகளை மேற்கொண்டனர்