மஹசென்" சூறாவளி விலகிச் செல்கின்றது!


வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த மஹசென் சூறாவளி நாட்டிலிருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பெய்துவரும் பலத்த மழையினால் மக்களின்  இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணம்- மட்டக்களப்பு- அம்பாறை- திருகோணமலை- மாத்தளை- கண்டி- நுவரெலியா- புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்துவருகின்றது.

கடும் காற்றினால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் வெள்ளநீர் தேங்கி நிற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்