Posts

சு.க. மட்டு மாவட்ட புதிய அமைப்பாளர் சுபைருக்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

Image
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் நோக்குடன் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சிப் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் காத்திரமான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 7 புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் துடிப்பான இளம் அரசியல் வாதியான எம்.எஸ்.சுபைர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமையான கட்சிக்கு பல நன்மைகளை ஈட்டித்தரும். 

அளுத்கம மக்களுக்கு நஷ்டஈட்டை வழங்க அமைச்சரவைப் பத்திரம்!

Image
ந.தே.முவின் குற்றச்சாட்டுக்கான விளக்கம்  அளுத்கம கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாட்சி அரசு உடனடியாக நஷ்டஈட்டினை வழங்கவேண்டும் என அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியதை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய  நஷ்டஈடு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பொய்யான பரப்புரைகள் செய்யப்பட்டுவருவதாக  புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் அண்மையில் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையொன்றில், அளுத்கம மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது சம்பந்தமான ஆதாரமற்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.  அவர் தனது ஊடக அறிக்கையில், அளுத்கம கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 33 வாரங்களைக் கடந்து விட்டபோதிலும் முறையான நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் எம்பிக்களால் முடியாது போயுள்ளதாகவும், அதற்கான முயற்சிகளை அவர்கள் செய்வதில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  அளுத்கம

பாடசாலைகளில் டெங்கு அடையாளம் கண்டால் அதிபர் மீது வழக்கு

Image
பாடசாலைகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் டெங்கு நுளம்பு உற்பத்தியாவது அடையாளம் காணப்பட்டால் குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் குறித்த அரச நிறுவனத்தின் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கட்டுமானப் பணிகள் இடம்பெறும் பகுதியில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டால் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தப்படவிருப்பதுடன், பயன்படுத்தாதுள்ள மீன்பிடிப் படகுகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். கல்வி அமைச்சு அதிகாரிகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சின் அதிகாரிகள், மீன்பிடித்துறை அமைச்சின் அதிகாரிகள், முப்படையினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது பற்றி கலந்துரையாடப்பட்டதாகவும், இதிலேயே மேற்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் கூறினார். இச்சந்திப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று அமைச்சில் நடைபெற்றது. இரண்டாம் தவணைக்காக பாடசாலை

சென்னை காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கற்கை நிலைய இலங்கை ஆலோசகராக என்.எம். அமீன் நியமனம்

Image
சென்னை காயிதே மில்லத் கல்வி சமூக நம்பிக்கை நிதியம் ஆரம்பிக்கும் காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்விக்கான அகடமியின் திறப்பு விழா எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடைபெறும். ஆரம்ப நிகழ்வில் மலேசியாவின் வர்த்தக ஆலோசனைக்குழுவின் தலைவர் தாத்தோ முஹம்மது இக்பால் முன்னிலையில் காயிதே மில்லத் கல்வி சமூக நிறுவனத்தின் தலைவர் பத்மபூஷணம் மூஸா ராஸா தலைமையில் நடைபெறும். கஸ்தூரி ஸம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீ என் ராம் அங்குரார்ப்பண உரை நிகழ்த்துவார். இந்த நிகழ்வில் நக்கீரன் வார இதழின் பிரதம ஆசிரியர் ஆர். கோபால், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ். ஸாதிக், நவமணிப் பத்திரிகை பிரதம ஆசிரியர் என். எம். அமீன், மஹிந்தா நேயம் அகடமியின் ஸ்தபாகர் எஸ். துரை சாமி, சிரேஷ்ட ஊடகவியலாளர் கனி ஆகியோர் உரையாற்றவுள்ளதோடு, காயிதே மில்லத் சர்வதேச சமூக நம்பிக்கை நிதியத்தின் செயலாளர் எம். ஜீ. தாவூத் மீயாகான் அறிமுக உரை நிகழ்த்தவுள்ளார். இந்த ஊடகக் கல்லூரியின் ஆலோசனைக்குழுவின் தலைவராக மூஸா ராஸாவும் செயலாளராக எம். ஜீ. தாவூத் மீயாகானும் பணி புரிவதோடு, அங்கத்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

Image
 முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மறிச்சிக்கட்டி மக்களின் பிரச்சினை  அரசியல் கண்கொண்டு பார்க்க வேண்டியதோ ,கட்சிகள் நிறங்கள்  சார்பாக பார்க்க வேண்டிய விடயமோ அல்ல . இது ஒரு சமுதாயத்தின் உரிமைப்  பிரச்சினை மறிச்சிக்கட்டியில் இன்று ஏற்பட்டிருக்கும் ஆபத்து இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லீம்களையும் பாதிக்கக்கூடியது .எமது போராட்டத்திற்கு   தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்குகின்ற அதே வேளையில் முஸ்லீம் அரசியல் தலைமைகள் கட்சி நிறம் பார்த்து பிரித்து செயற்ப்படுவது சமுகத்திற்கே   வெட்க கேடான விடயம் . இவ்வாறு முசலி பிரதேச அபிவிருத்தி குழு ஆலோசகர் M.L.S.அலிகான் ஷரீப் தெரிவித்தார் மறிச்சிக்கட்டியில் கடந்த 20 நாட்களாக இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்கள் பலர் இணைந்து கொண்டனர் . கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் C.M.முபீத் தலைமையில் சென்ற குழுவினர் அந்த மக்களுடன் இணைந்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர் . அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அலிகான் ஷரீப் மேற்கண்டவாறு பேசினார் அவர் அங்கு மறிச்சிக்கட

நற்பிட்டிமுனை சிறுவர்கள் பாராளுமன்றத்தை பார்க்கும் அரிய வாய்ப்பு

Image
கடந்த வருடம் ஐந்தாம் தர புலமை பரீட்சையில் சித்தி பெற்ற நற்பிட்டிமுனை மாணவர்களுக்கு நற்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் கெளரவிப்பு நிகழ்வு அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் 2016.11.08 நடை பெற்ற போது அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்வி ராஜாங்க அமைச்சர் வீ . ராதா கிருஷ்ணன் மாணவர் களுக்கு நினைவு சின்னம் வழங்கி வைத்தார் . அவர் அன்று அந்த நிகழ்வில் உரையாற்றும் போது நற்பிட்டிமுனை சாதனை மாணவர்களுக்கு எனது பரிசாக பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தையும் அன்றய தினம் பாராளுமன்றில் மதிய உணவையும் வழங்கி கெளரவிப்பேன் என்றும் அதற்கான ஏற்பாட்டினை தம்பி ஹலீம் ஏற்பாடு செய்யும் படியும் வாக்குறுதி வழங்கினார் . கல்வி ராஜாங்க அமைச்சர் வழங்கிய வாக்குறுதி கடந்த திங்கட் கிழமை (17)நிறைவேற்றப் பட்டுள்ளது . " நற்பிட்டிமுனை சாதனையாளர்களின் பாராளுமன்றம் நோக்கிய பயணத்தில் " சாதனை மாணவர்கள் 10 பேரும் அவர்களது பெற்றோர்களும் ,உறவினர்களும் ,ஆசிரியர்கள் மற்றும் நற்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில்

நற்பிட்டிமுனை வரலாற்று சாதனை!! லங்கா சதோச விற்பனை நிலையம் குதூகல திறப்பு விழா !!!

Image
கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  கல்முனை தொகுதி பிரதி அமைப்பாளரும்  உயர் பீட உறுப்பினரும் லங்கா சதோச நிறுவனத்தின்  பணிப்பாளருமான சி.எம்.முபீத்  தலைமையில் திறந்து வைக்கப்பட்ட   நிகழ்வில்  கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஸாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு  திறந்து வைத்தார்  பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஃரூப் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எஸ்.சுபைதீன் , காரிய வள கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.ஏ.அப்துல் மஜீத்,லக்சல நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ,கல்முனைக்குடி அமைப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் ,நெடா நிறுவனத்தின் பணிப்பாளரும்  மருதமுனை அமைப்பாளருமான  சித்தீக் நதீர்,அம்பாறை மாவட்ட கொள்கைப்பரப்பு செயலாளர் எம்.எம்.ஜுனைதீன்  உட்பட  கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரின் இணைப்பாளரும்  அகில இலங்கை  மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி இளைஞர்  அமைப்பாளருமான  சி.எம்.ஹலீம்  ஆகியோர் விசேட விருந்தினர்களாக கலந்து சிறப்

கல்முனை ஸ்ரீ தரவப்பிள்ளையார் ஆலய செயலாளர் வரதன் வாகன விபத்தில் பலி

Image
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனை -03ஆம் குறிச்சியை சேர்ந்த அப்புக்குட்டி வரதராஜன் (58)என்பவர் மரணமடைந்துள்ளார் . இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு 10.30மணிக்கு சாய்ந்தமருது பிரதான வீதியில் ரெட் சில்லி ஹோட்டலுக்கு முன்பாக இடம் பெற்றுள்ளது திருக்கோவிலில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மோட்டார் சைக்களில் பயணிக்கும் போது நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. தலையில் ஏற்பட்ட பலமான காயத்தினால் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு வரதராஜன் என்பவர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதன் பின்னர் மரணமடைந்தார் . கல்முனை ஸ்ரீ தரவப்பிள்ளையார் ஆலயம் மற்றும் கல்முனை கண்ணகி அம்மன் ஆலயங்களின் அறப்பணி புரிகின்ற இவர் 03 பிள்ளைகளின் தந்தையாவார் . சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளதுடன் விசாரணை நடாத்தப் படுகிறது . இறந்தவரின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் வைக்கப் பட்டுள்ளது .

கல்முனை நகர் அருள் மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா

Image
கல்முனை நகர் அருள் மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக் கிழமை வெகு சிறப்பாக இடம் பெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு அபிசே கத்துடன் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி காலை 6.00 மணிக்கு எம் பெருமான் தேரில் எழுந்தருளி தேர்பவனி ஆரம்பமானது. கௌரி அம்பாள் சமேத சந்தான ஈஸ்வரப் பெருமான் ஒரு தேரிலும், விநாயகப் பெருமான் மற்றுமொரு தேரிலும், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் ஒரு தேரிலுமாக மூன்று தேர்களில் இறைவன் பவனி வருகின்ற  திரு நிகழ்வு  சிறப்பாக இடம் பெற்றன. யாழ் இளைஞர்  யுவதிகளின் காவடியாட்டம் ,கரகாட்டம்,  நாதஸ்வர தவில் முழங்க, பறை மேழ முழக்கத்துடன் ஆண்பெ, ண் வேறுபாடின்றி பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இத் தேர் திரு விழா கல்முனை பிரதான வீதி ஊடாக வலம் வந்து ஆலயத்தை சென்றடைந்தது.  கடந்த மார்ச் 29ஆம் திகதி  கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய கிரியைகளைத் தொடந்து திரு விழாக்கள்  ஆலய வழிபாடுகள் மற்றும் அன்னதானம் வழங்கல் இடம் பெற்று 11 ஆம் நாளான இன்று இத் தேர் திரு விழா இடம் பெற்றன. நாளை 12 ஆம் நாளான இறுதி நிகழ்வாக தீர்தேற்சவம் நடை பெறும். பிரம்ம ஸ்ரீ சண்