கல்முனை மக்களுக்கு ஒரு திறந்த மடல்
SM சபீஸ் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு ஒரு அடையாளத்தையும் முகவரியையும் பெற்றுத்தந்த நமது பெரும்தலைவர் மாமனிதர் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் பிறந்து வாழ்ந்த பெருமைக்குரிய கல்முனை மண்ணில் வாழும் எமது உடன் பிறப்புக்களே, உங்கள்மீது இறைவன் அவனது அருளை பொழிய பிரார்த்தித்தவனாக பழமைவாத சிந்தனைகளுக்குள்ளும், இத்துப்போன காலாவதியான யோசனைக்குள்ளும் எமது மக்களை உணர்ச்சி ரீதியாக தள்ளி, ஊர்வாதத்தை உண்டுபண்ணி, சிந்திக்க வைக்கும் ஆற்றலை மழுங்கடிக்கச் செய்யும் சதிகாரர்களின் சூழ்சிகளை, கல்வியால் முன்னேறிய மாநகரத்து மக்களாகிய நீங்கள் எமது உடன்பிறப்புக்கள் அறிந்து சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் நாங்கள்தான் என தம்பட்டம் அடித்துக்கொண்டு பங்காளிகட்சி என்ரபேரோடு இருக்கும் கௌரவ ஹகீம் நகர அபிவிருத்தி அமைச்சும் அதன்கீழ் காணி கையகப்படுத்தல் காரியாலயத்தையும் வைத்துக்கொண்டிருந்த போது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிலத்தினை கையகப்படுத்தி அம்மக்களுக்கு விடிவு பெற்றுக்கொடுக்காதது ஏன்? மயோன் முஸ்தபாவின் முயற்சியில் கொண்டுவரப்பட்டு பேரியல் அஸ்