10வது ஆண்டு கடல் கோள் அனர்த்த நினைவுக் கட்டுரை - எமது சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் 2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த சுனாமி அனர்த்தத்தினால் இலங்கை உட்பட ஆசியாவிலுள்ள பல நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. சிலருக்கு தங்கச் சுனாமி என வர்ணிக்கப்பட்டாலும், அந்த அனர்த்தத்தினால் தமது உறவுகளை, பெற்றோரை, மனைவியை, கணவனை, தாயை, தந்தையைக் காவுகொடுத்தும், வீடுகள், சொந்தங்கள், வளங்களை, பொருளாதாரத்தை இழந்து நின்ற பேரவலத்தின் எதிர்விளைவுகளை, அதன் தாக்கத்தை இன்றும் அனுபவிக்கும் மக்களும் நம்மிடையே உள்ளனர். இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் மட்டுமன்றி உள்ளூர் நிறுவனங்களும், அமைப்புகளும், பாதிக்கப்படாத மக்களும் காட்டிய காருண்யமான சேவைகளையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவுகூரவேண்டும். அதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை விடவும் கூடுதலான வீடுகள் கட்டப்பட்ட சில மாவட்டங்களும் நம் நாட்டிலுள்ளன. அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்ட வீட்டுத் தொகுதிகள் கையளிக்கப்படாத நிலைமை இன்றும் உள்ளதையும் இந்த 10 ஆவ...