Posts

கல்முனை கடலரிப்பு தடைக் கற்களை சீராக ஒழுங்குபடுத்தி தருமாறு மக்கள் வேண்டுகோள்

Image
நிப்ராஸ் மன்சூர் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு அண்மித்த கடற்கரை யோரத்தில்  கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல தசாப்தங்களுக்கு முன்னாள் இடப்பட்ட பாரிய பாரங்கற்களை சீராக ஒழுங்குபடுத்தி தருமாறு பிரதேச அரசியல்வாதிகளிடம் பொது மக்கள் வேண்டுகின்றனர்.  குறித்த பள்ளிவாசலுக்கு அண்மித்து செல்கின்ற கிழக்கு கடற்கரை வீதியில்  அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விஸ்தரிப்பு பணிக்காக நகர்த்தப்பட்ட கற்கள் கடற்கரையில் ஆங்காங்கே பரவிக் காணப்படுவதனால் ஒய்வு நேரங்களை கழிப்பதற்காக இங்கு வருகின்ற பொது மக்களுக்கு இது அசெளகரியங்களை ஏட்படுத்துவதுடன் கடற்கரையின் அழகிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  கடல் கொந்தளிப்பு காலங்களில் பாரிய கடல் அலைகளினால் இக் கற்கள் படிப்படியாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுமாக இருந்தால் இப் பிரதேசத்தில் பாரம்பரியமாக மேற்கொண்டுவரும் கரை வலை மீன்பிடி தொழிலிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதனால் இவ்விடயங்களை கருத்தில் எடுத்து விரைந்து செயற்படுமாறு பொது மக்கள் பிரதேச அரசியல் வாதிகளிடம் வேண்டுகின்றனர்.  மேலும் இது விடயமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நிறுவனங்கள்  சம்மந்தப்பட்ட

நேற்று மாலை கிழக்கில் வீசிய சூறாவளியில் நட்பிட்டிமுனை கிராமத்தில் பலத்த சேதம்

Image

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திர வேலாயுதர் தேவஸ்தான வருடாந்த கும்பாபிஷேகம்

Image
பாண்டிருப்பு அருள்மிகு  ஸ்ரீ சித்திர வேலாயுதர் தேவஸ்தான வருடாந்த கும்பாபிஷேக தினநவோத்திர சத சங்காபிஷேக பெருவிழாவின் 11ஆம் நாள் சடங்குகளான சப்பரத் திருவிழா , பாற்குடப்பவனி , சங்காபிஷேக கிரியைகள் இன்று (03) நடை பெற்றது. கடந்த மே மாதம் 23 ஆம் திகதி விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமான உற்சவகால கிரியைகள் கடந்த 10 தினங்களாக புண்ணியாகவாசனம்,வாஸ்துசாந்தி , வசந்த மண்டப பூஜை, சுவாமி உள்வீதி வலம் வருதல் நடை பெற்று இன்று காலை சப்பரத் திருவிழா இடம் பெற்றது. அதனை தொடர்ந்து பாண்டிருப்பு  மாரியம்மன்   தேவாலயத்தில் இருந்து ஆரம்பமான பால்குட பவனி  நிகழ்வில் பெருந் தொகையான பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர். நாளை திங்கட் கிழமை காலை 7.00 மணிக்கு திருப்பொற்சுண்ண சூர்ணோற்சவ ஆராதனையைத் தொடர்ந்து  பகல் மகேஸ்வரப் பூஜையாக சமுத்திர தீர்த்தோற்சவம் இடம் பெற்று இரவு  7.00 மணிக்கு  வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சித்திர வேலாயுதப் பெருமானுக்கு சுப முகூர்த்தத்தில் மணவாளக் கோல திருமாங்கல்யதாரண திருப் பொன்னூஞ்சல் நடை பெற்று கிரியைகள் யாவும் நிறைவு  பெறும்.

கல்முனை மாநகர சபையின் நிதிக்குழு உட்பட அனைத்து நிலயியல் குழுக்களும் எதிரணி ஆதிக்கத்துக்குள்

Image
கல்முனை மாநகர சபை நிதிக்குழுவின்  உறுப்பினர்களாக வாக்கெடுப்பு மூலம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்  கல்முனை மாநகர சபை இரண்டாவது அமர்வு  மாநகர முதல்வர்  சட்டத்தரணி ஏ.எம்.ரகீப் தலைமையில் இன்று  புதன்கிழமை காலை 10.30க்கு  நடை பெற்றது. கல்முனை மாநகர சபையின் நிலையியற் குழுக்கள் அமைப்பது தொடர்பில் இருந்துவந்த  இழுபறி நிலைக்கு இன்று முடிவுகட்டப்படுள்ளது . நிதிக்குழுவில் முதல்வர் உட்பட ஆறு உறுப்பினர்கள் அங்கம் வகிக்க வேண்டும் அதன் அடிப்படையில்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆட்சி புரியும் கல்முனை மாநகர சபையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஐந்து பேரும்  எதிர்க்கட்சி அங்கத்தவர்களாகும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினரான சி.எம்.முபீத் -23 வாக்கு , தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன்- 22 வாக்கு ,பொன்செய்வநாயகம்- 23 வாக்கு  , சாய்ந்தமருது சுயேச்சை குழு உறுப்பினர்களான அசீம்-22வாக்கு  மற்றும் ரஸ்மீர்- 22 வாக்குகள் பெற்று   தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .

சமூக நல்லிணக்கத்துக்கு அனைவரது பங்களிப்பும் அவசியம்

Image
அம்பாறை மாவட்ட நல்லிணக்கக் குழு வலியுறுத்தி யு ள்ளது சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் சம்பவங்கள் இடம் பெறுகின்ற  சந்தர்ப்பங்களில் அந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் ,திணைக்களங்களின் அதிகாரிகள் நடை பெற்ற சம்பவங்களை விசாரித்து அதற்கான தீர்வை வழங்குகின்ற போது  சமூகங்களுக்கிடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை தவிர்ந்து கொள்ளலாம். சிறிய சம்வங்களை பெரிதாக்கி சமூகங்களுக்கு மத்தியில் வீணாண குழப்பங்கள் ஏற்படுத்துவதை சமூக வலைத்தளங்களும் மற்றும் ஊடகங்களும் கரிசனையுடன் செயற்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட நல்லிணக்கக் குழு வலியுறுத்தி யு ள்ளது. சமாதானமும் சமூகப் பணிக்குமான மன்றத்தின் அனுசரணை யு டன் அம்பாறை மாவட்ட நல்லிணக்கக் குழுவின் ஏற்பாட்டில் நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாடு நேற்று கல்முனையில் இயங்குகின்ற அம்பாறை மாவட்ட நல்லிணக்கக் குழு காரியாலயத்தில் நடை பெற்ற போது இந்த விடயங்கள் வலி யு றுத்தப்பட்டு  அறிக்கை  யு  ம் வெளியிட்டு வைக்கப்பட்டன. அண்மையில் திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில்  நடை பெற்ற துரதிஸ்ட சம்பவத்தை பெரிது படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் சம்பவ

நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய மாணவர்களுக்கு பாராட்டு

Image
நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் முதல் தடவையாக கல்விப் பொது தராதர பரீட்சைக்குத்  தோற்றி  சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு சமீபத்தில் நடை பெற்றது. கல்லூரி அதிபர் வை.எல்.பஷீர் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலையக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து கொண்டார். கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ .எம்.முபீத் ,கைத்தொழில் வணிக அமைச்சரின் இணைப்பாளரும் அல் -கரீம் பவுண்டேசன் தலைவருமான சீ .எம்.ஹலீம் ,பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா ,ஏ.எல்.எம்.முக்தார் ,எஸ்.எல்.ஏ.ரஹீம், கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.எம்.சக்காப்   ஆகியோரும்  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம்,பிரதி அதிபர்  வீ.எம்.ஸம்ஸம் , உதவி அதிபர்களாக மௌலவி ஏ.சாலிதீன்,திருமதி ஏ.முனாசீர் ,கல்முனை அல் -ஹாமியா அரபுக் கல்லூரி அதிபரும் நற்பிட்டிமுனை உலமா சபை தலைவருமான மௌலவி யு.எல்.ஏ.கபூர்  ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து  மாணவர்களுக்கு பாராட்டு  வழங்கி சிறப்பித்தனர்.

கல்முனை மாநகரத்தில்; பெரும் சவலாலாக இருந்து வருகின்ற திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணப்படும்

Image
கல்முனை மேயர் ஏ.எம்.றக்கீப் (பி.எம்.எம்.ஏ.காதர்)  கல்முனை மாநகரப் பிரதேசத்திலே பெரும் சவலாக இருந்து வருகின்ற திண் மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு  காண்பதற்று துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தெரிவித்தார்.  கல்முனை மாநகர சபையின் ஆறாவது மேயராகத் தெரிவு  செய்யப்பட்டுள்ள மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்பைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வு  செவ்வாய்க்கிழமை(08-05-2018)மாலை மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய போதே மேயர் றக்கீப் இவ்வாறு தெரிவித்தார்.பெரிய நீலாவணை  நெசவாளர் சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த கௌரவிப்பு நிகழ்வு  கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்வின் நெறிப்படுத்தலில் மன்றத்தின் தலைவர் ஏ.எல்.சபுறுத்தீன் தலைமையில் நடைபெற்றது. மேயர் றக்கீப் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :-கல்முனை மாநகரப் பிரதேசத்திலே பல்வெறு பிரச்சினைகள் உள்ளன அவற்றை உடனடியாகத் திர்த்து வைக்க முடியாது பிரச்சினைக

ஹரீஸ் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருக்கான கடமைப் பொறுப்பேற்பு.

Image
(அகமட் எஸ். முகைடீன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (10) வியாழக்கிழமை கொழும்பு உலக வரத்தக மையத்தின் கிழக்கு கோபுரத்தின் 36வது தளத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவவிதாரண உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகள், அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள் மற்றும் பல பிரமுகர்களும்  கலந்துகொண்டனர். அண்மையில் நடைபெற்ற பகுதியளவிலான அமைச்சர், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் மாற்றத்தின்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராகவிருந்த சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அர

ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் இரத்ததான முகாம்

Image
“உதிரம் கொடுத்து பிறர் உயிர்காப்போம” எனும் தொனிப் பொருளிலான இரத்ததான முகாம் நேற்று(06.05.2018) ஞாயிற்றுக் கிழமை சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் பள்ளிவாயலின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இவ் இரத்ததான நிகழ்வில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணிபுரியும் டாக்டர் ஏ.எச்.எம். ரிஷ்வி மற்றும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுவதையும் ஆண், பெண் என இருபாலாரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியதையும் படங்களில் காணலாம். படமும் தகவலும்: ஏ.முஹம்மத் பாயிஸ்