உதவாக்கரைகளென சமூகத்தால் ஒதுக்கப்படும் மாற்றுத்திறனாளிகளை சமூக அந்தஸ்த்துடன் வாழ ஹியூமன் லின்க் வழிகாட்டுகின்றது.
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார். (பி.எம்.எம்.ஏ.காதர்) சமூகத்தால் ஒதுக்கப்பட்டு உதவாக்கரைகளென நாமம் சூட்டப்பட்டு வாழந்துவருகின்ற மாற்றுத்திறனாளிகளை சமூக அந்தஸ்த்துடன் சமமாக வாழக்கூடிய நிலைக்கு அவர்களது திறன்களை விருத்தி செய்து தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு வழிகாட்டி வருகின்ற ஹியூமன் லின்ங் நிறுவனத்தின் சேவைகள் அளவீடு செய்ய முடியாத பணியாகும் என கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் தெரிவித்தார். மருதமுனை ஹியூமன் லின்க் விஷேட தேவையுடையோருக்கான வளப்படுதல் நிலையத்தின் 10 வருட நிறைவு நினைவுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் ஹியூமன் லின்க் பணிப்பாளர் ஏ.எல்.கமறுத்தீன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்; இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-உலக சனத்தொகையில்15வீதத்திலும் இலங்கையில் 10 வீதத்திலும் கிழக்கு மாகாணத்தில் 10 வீதத்திலும் விஷேட தேவையுடையவர்கள் வாழ்ந்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறனவர்களை வளப்படு