பொலிஸ் பரிசோதகரும்,கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் காலமானார்.
(பி.எம்.எம்.ஏ.காதர்) பொலிஸ் பரிசோதகரும், கல்ம ுனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் வயது 54 இன்று(05-12-2018)அதிகாலை ஓரு மணியளவில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிளந்துள்ளார். இவர் 1965.02.10ஆம் திகதி மருதமுனையில் பிறந்தார்.இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் மருதமுனையைச் சேர்ந்த மர்ஹ_ம் அனுஸ்லெப்பை மரைக்கார்; செயினுலாப்தீன்,ஆதம்பாவா ஹபீபா உம்மா தம்பதியின் மூத்த புதல்வராவார். இவர் 1988.01.18ஆம் திகதி உப பொலிஸ் பரிசோதகராக நியமனம் பெற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் தனது கடமையைப் பொறுப்பேற்று தலைமன்னார்,கல்முனைஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றினார். கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெ பொலிஸ் பிரிவில் கடமையின் நிமிர்த்தம் சென்று கொண்டிருந்த போது பயங்கர வாதிகள் மறைந்திருந்த தாக்கிய போது மிகவும் சாதுரியமாக தன்னுடன் பயனித்த பொலிஸ் உத்தியோகத்தர்களையும், ஆயுதங்