இந்நாட்டு கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு



நாட்டில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரையில் 171பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் 137 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 29 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 275 க்கும் அதிகமானோர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்