கொரோனா வைரஸால் இதுவரை 21,19301 பேர் பாதிப்பு - 141945 பேர் பலி


சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 2,064,668 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 1,441901 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 508,826 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவின் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 141945 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-
அமெரிக்கா - 30,985
ஸ்பெயின் - 18,812
இத்தாலி - 21,645
பிரான்ஸ் - 17,188
ஜெர்மனி -3,804
இங்கிலாந்து - 12,894
சீனா - 3,346
ஈரான் - 4,777
துருக்கி - 1,518
பெல்ஜியம் - 4,440
பிரேசில் - 1,760
கனடா - 1,010
நெதர்லாந்து - 3,145
ஸ்வீடன் - 1,203

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்

கிழக்கு மாகாண விளையாட்டு போட்டி ஜூன் 5 இல்