பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை (27) பதவியேற்க உள்ளனர்.

நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இவ்வாறு பதவியேற்க உள்ளனர்.

அத்துடன் புதிய அமைச்சின் செயலாளர்கள் நியமனங்கள் வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது