கல்முனை கல்வி வலயத்தில் அறுவருக்கு குரு பிரதீபா பிரபா விருது


 கல்வி அமைச்சின்  வழி காட்டலில்  நடை பெறும்  ஆசிரியர் அதிபர்
மதிப்பளிக்கும் இவ்வருடத்துக்கான  குரு பிரதீபா பிரபா விருது பெற கல்முனை
கல்வி வலயத்தை  சேர்ந்த  ஆறு ஆசிரியர்கள் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் .

சாய்ந்தமருது அரச முஸ்லிம் கலவன் பாடசாலை ஆசிரியை திருமதி சுபைதா
மொகம்மட்  இப்ராஹிம் , மாளிகைக்காடு அல் -ஹுசைன்  வித்தியாலய ஆசிரியை
திருமதி எஸ்.எச்.மொஹம்மட் றபீக் ,காரைதீவு  சண்முகா மகா வித்தியாலய
ஆசிரியை  திருமதி புவனேஸ்வரி ஜெயகனேஷ் ,கல்முனை  உவெஸ்லி உயர்தர பாடசாலை
ஆசிரியை திருமதி எஸ்.மோகன்,சாய்ந்தமருது அல் -ஹிலால் வித்தியாலய அதிபர்
எம்.எல்.மொஹம்மது பைசால் ,நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலய ஆசிரியர்
எம்.எஸ்.கபீர்  ஆகிய  ஆறுபேரும் குரு பிரதீபா பிரபா விருது பெறவுள்ளனர் .

இந்த விருது வழங்கும் விழா நாளை   வெள்ளிக்கிழமை (05) காலை
10.00 மணிக்கு  பண்டார நாயக்க  சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடை
பெறவுள்ளது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்