103 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று கல்முனை கல்வி வலயத்துக்கு பெருமை

இன்று  வெளியான சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் 103 மாணவர்கள் 9ஏ  சித்தி பெற்று கல்முனை கல்வி வலயத்துக்கு  பெருமை சேர்த்துள்ளனர் . 

கல்முனை கோட்டத்தில் 40 மாணவர்களும் ,கல்முனை தமிழ் கோட்டத்தில் 31 மாணவர்களும் ,காரைதீவு கோட்டத்தில் 07 மாணவர்களும் ,நிந்தவூர் கோட்டத்தில் 12 மாணவர்களும் சாய்ந்தமருது கோட்டத்தில் 13 மாணவர்களும் 9ஏ சித்தி பெற்றுள்ளனர்  . 

கல்முனை கார்மேல் பற்றிமா  பாடசாலையில் 26 மாணவர்களும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 25 மாணவர்களும்  9ஏ  சித்தி பெற்றுள்ளனர் .

கல்முனை கல்வி வலயத்தில் வரலாற்று  படைத்துள்ள மாணவர்களையும் அதற்கு துணையாக செயற்பட்ட அதிபர்களையும் ,ஆசிரியர்களையும் கல்முனை வலயக்  கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பாராட்டியுள்ளார் .

கடந்த ஆண்டு கல்முனை  வலயத்தில் 54 மாணவர்கள் சகல பாடங்களிலும் 9ஏ சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்