103 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று கல்முனை கல்வி வலயத்துக்கு பெருமை

இன்று  வெளியான சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் 103 மாணவர்கள் 9ஏ  சித்தி பெற்று கல்முனை கல்வி வலயத்துக்கு  பெருமை சேர்த்துள்ளனர் . 

கல்முனை கோட்டத்தில் 40 மாணவர்களும் ,கல்முனை தமிழ் கோட்டத்தில் 31 மாணவர்களும் ,காரைதீவு கோட்டத்தில் 07 மாணவர்களும் ,நிந்தவூர் கோட்டத்தில் 12 மாணவர்களும் சாய்ந்தமருது கோட்டத்தில் 13 மாணவர்களும் 9ஏ சித்தி பெற்றுள்ளனர்  . 

கல்முனை கார்மேல் பற்றிமா  பாடசாலையில் 26 மாணவர்களும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 25 மாணவர்களும்  9ஏ  சித்தி பெற்றுள்ளனர் .

கல்முனை கல்வி வலயத்தில் வரலாற்று  படைத்துள்ள மாணவர்களையும் அதற்கு துணையாக செயற்பட்ட அதிபர்களையும் ,ஆசிரியர்களையும் கல்முனை வலயக்  கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பாராட்டியுள்ளார் .

கடந்த ஆண்டு கல்முனை  வலயத்தில் 54 மாணவர்கள் சகல பாடங்களிலும் 9ஏ சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்