சிம்ஸ் கேம்பஸின் சான்றிதழ் வழங்கும் விழா !!



சிம்ஸ் கேம்பஸ் கல்விநிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம் முஸ்தபாவின் முயறசியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உயர்கல்வியை முடித்த மாணவர்களுக்காக உலக கனடிய பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் இலவசமாக கணனி , வர்த்தக துறையில் தொழில் சார்ந்த பாடநெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றுமாலை சிம்ஸ் கேம்பஸ் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம் முஸ்தபா தலைமையில் சாய்ந்தமருது பேர்ல்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உலக கனடிய பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி எஸ்தர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.மேலும் இந்நிகழ்வில் உலக கனடிய பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் கிழக்கு மாகாண சிரேஷ்ட திட்டமிடல் பணிப்பாளர் மயில்வாகனம் யோகேஸ்வரன் ,அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஜேசு சகாயம் , திருமலை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.சரவணபவன், நிகழ்சசி திட்டமிடல் பணிப்பாளர் திரு.முகம்மது இர்பான் சிம்ஸ் கேம்பஸ் பிராந்திய நிலைய முகாமையாளர் சப்ரியா அஸீஸ் , விரிவுரையாளர்கள் ,உலக கனடிய பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் 300 க்கும் அதிகமான மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி