கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற வாணி விழா


கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நவராத்திரி விழாவின் வாணி விழா வழிபாடு பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் தவைமையில் இடம் பெற்றது 
வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளரகள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்அ,திபர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

நிழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதிப் பதிவாளர் ச.சிவகுமார் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சைவ நற்சிந்தனை சிறப்புரை நிகழ்த்தினர். 

வலயக் கல்வி அலுவலக மண்டபத்தில் இடம் பெற்ற வாணி விழா பூசை வழிபாடுகள் காரைதீவு  நந்தவனப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிரியா திலகம் இ.மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம் பெற்றதுடன் பாடசாலை மாணவிகளின் நடன நிகழ்கவுகளும் இடம் பெற்றன. 
இன மத பேதமின்றி வருடந்தோறும் நடை பெற்று வருகின்ற வாணி விழா நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் உட்பட ஆசிரிய ஆலோசகர்கள் , அதிபர்கள் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன் கலை நிகழ்கவுளில் பங்குபற்றிய மாணவிகளுக்கு பரிசளிப்பும் இடம் பெற்றது. 






















Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது