நெற்பிட்டிமுனையின் வரலாறும் பண்பாட்டியலும் நூல் வெளியீட்டு விழா

(யு.எம்.இஸ்ஹாக் )

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய அதிபர் கவிஞர்  எம்.எல்.ஏ.கையூம் எழுதிய நெற்பிட்டிமுனையின்   வரலாறும் பண்பாட்டியலும்  நூல் வெளியீட்டு விழா  நாளை மறுதினம்  சனிக்கிழமை (05) நற்பிட்டிமுனை  அல் -அக்ஸா மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடை பெறவுள்ளது .

நற்பிட்டிமுனை நம்பிக்கையாளர் சபை தலைவரும் அட்டாளைச் சேனை  கல்வியற்கல்லூரி  விரிவுரையாளருமான மௌலவி ஏ.எல்.நஸீர் கனி தலைமையில்  நடை பெறவுள்ள  நூல் வெளியீட்டு விழா வைபவத்தில்  கிழக்கு மாகாண  கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  நூலை வெளியிட்டு வைக்கவுள்ளார் .

நூலின் முதல் பிரதியை நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின்  தலைவரும்  சமூக சேவையாளருமான சி.எம்.ஹலீம் பெற்றுக் கொள்வார் .

நிகழ்வில் கெளரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் , மட்டக்களப்பு  கல்வியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் ,அடடாளைச்சேனை கல்வியற் கல்லூரி பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் ஆகியோரும் . விசேட அதிதிகளாக கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலை தர நிர்ணய வைத்திய அதிகாரி எம்.சி.எம்.மாஹிர் , கல்முனை பிரதேச செயலாளர்  எம்.எச்.எம்.கனி , கிழக்கு மாகாண பிரதம  உள்ளக கணக்காய்வாளர் எச்.எம்.எம்.ரஷீட் ,ஓய்வு நிலை வலையாக கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் , தென் கிழக்குப் பல்கலைக்கழக  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எம்.நளீர் ,மட் டக்களப்பு  கணக்காய்வு அதியட்சகர் பீ.ஏ.ஜெரோஸ் , மட்டக்களப்பு ஸ்ரீ லங்கா டெலிகொம் முகாமையாளர் ஏ.அன்பாஸ் , சம்மாந்துறை  பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக்  ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளார் .
  தென்கிழக்குப் பல்கலைக்கழக  தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா  மற்றும் பன்னூல் ஆசிரியர் கவிஞர்  மருதூர் மஜீத்  ஆகியோரால்  நூலின்  நயவுரைகள் வழங்கப் படவுள்ளது.

இதே வேளை  நட்பிட்டிமுனை கிராமத்தின் பண்பாட்டியலை வெளிப்படுத்தும் வகையில்  கிராமிய  நாட்டிய நாடக காலை நிகழ்வுகளும் அரங்கேற்றப் படவுள்ளது 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி