கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் குருதிக் கொடையாளர்கள் கெளரவிப்பு

மற்றவர்களின் உயிரைக் காக்க தன் உதிரத்தை தானமாக வழங்கும்  இரத்த தான கொடையாளர்களை கௌரவித்து பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் முதல் தடைவையாக அம்பாறை மாவட்டத்தில்  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்வில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து இரத்த தானம் வழங்கும் குருதிக் கொடையாளர்கள் 100க்கும் மேற் பட்டோர் கௌரவிக்கப் பட்டனர்.

கல்முனை வடக்கு அதார வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர்.என்.ரமேஸ் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூட மண்டபத்தில் சமீபத்தில்  இவ்வைபவம் இடம் பெற்றது.


கல்முனை வடக்கு அதார வைத்தியசாலை அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன்,  அம்பாறை பிராந்திய இரத்த வங்கி முகாமையாளர் டாக்டர் .குமாரி அபேசேகர ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு குருதிக் கொடையாளர்களை கௌரவித்தனர். 







Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி