சிறுவர் கலை,கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்ற கல்முனை அல் -பஹ்ரியா மாணவர்களுக்கு சான்றிதழ்

கல்முனை பிரதேச செயலக பிரதேச மட்டத்திலான சிறுவர் கலை,கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்ற கல்முனை அல்- பஹ்ரியா  மகா வித்தியாலய மாணவ,மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு கல்முனை சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்  நடை பெற்றது.

வித்தியாலய அதிபர்  ஏ.ரஸாக்  தலைமையில் கல்லூரியில் நடை பெற்ற நிகழ்வில்   பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி  பிரதம அதிதியாகவும்  , திவி நெகும தலமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.ஸாலிஹ் , சமூக அபிவிருத்தி மன்ற அதிகாரி என்.எம்.நவுசாத் , பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.றபாய்தீன்  உட்பட அதிதிகள்  வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்குகின்றனர்  .நிகழ்வில்  கல்லூரி ஆசிரியர்கள்  மாணவர்கள் கலந்து கொண்டனர் . 







Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று