உயர் தரம் கற்க தகமை பெற்ற மாணவர்களின் வலய மட்ட தரப் படுத்தலில் கல்முனை கல்வி வலயம் தேசியரீதியில் 17வது இடம் ! கிழக்கில் 03வது இடம் !!

கடந்த ஆண்டு (2015) க.பொ .த  சா/த  பரீட்சையில்  உயர்தரம் கற்க தகமை பெற்ற மாணவர்களின் வலய மட்ட தரப் படுத்தலில்   தேசிய மட்டத்தில் கல்முனை கல்வி வலயம் 17வது இடத்திலும் கிழக்கு மாகாணத்தில் 3வது  நிலையிலும் உள்ளது  என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார் .
கடந்த 2014 ஆம் ஆண்டு 18வது நிலையில் இருந்த கல்முனை கல்வி வலயம் 17வது  நிலையை அடைவதற்கு  பங்களிப்பு செய்த கல்முனை வலயத்தில் உள்ள   பிரதிக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் , உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட அதிபர்கள் ஆசிரியர்களுக்கு  வலயக் கல்விப் பணிப்பாளர் அப்துல் ஜலீல் நன்றியை  தெரிவித்தார் .

குறிப்பாக  கிழக்கு மாகாணத்தில் 3வது நிலையை அடைவதற்கு காரணகர்த்தாவாகவும்,வழிகாட்டியாகவும் செயற்ப்பட்ட கிழக்குமாகாண  கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் பாராட்டப் படவேண்டிய ஒருவர் என  வலயக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார் . 


Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்