கல்விக்கு கை கொடுக்கும் கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பு

கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச வறிய மாணவர்களின் கல்வித்தாகத்தை போக்கி அவர்களின் வாழ்க்கையில் எழுச்சியை உண்டு பண்ணும் நோக்கில் பாடசாலைகளின் வறிய மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.  

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம்  வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சி.எம். அபூபக்கர்  தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்  பிரதம அதிதியாக  கலந்து கொண்டார் .
கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பின் பிரதித் தலைவரும் கல்முனை பெரியபள்ளிவசல் பேஷ் இமாமுமான எம்.சி.ஏ.சமட் மௌலவி ,அமைப்பின் செயலாளர் எஸ்.எல்.எம்.இப்றாஹிம் பொருளாளர்  ஏ.ரஹீம்  மற்றும்  அமைப்பின் ஆலோசகர்களான வைத்தியர்கள்  ஜெசீலுல்  இலாஹி, ஏ.எல்.எம்.பாறூக்  உட்பட  முக்கிய பலர்  கலந்து கொண்டு  மாணவர்களுக்கு கற்றல் உபகரங்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் மேற்படி அமைப்பின் அங்கத்தவர்கள்,பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பானது இன,மத பேதங்கள் பாராது கல்விக்கு   அதிக முக்கியத்துவத்தை கொடுத்து  செயற்பட்டு வரும் அமைப்பானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.










Comments