நற்பிட்டிமுனை லாபீர் முன்பள்ளிப் பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா

நற்பிட்டிமுனை லாபீர்  முன்பள்ளிப்  பாடசாலை  வருடாந்த பரிசளிப்பு விழா இன்று  (20)   பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில்  லாபீர் வித்தியாலய பிரதான மண்டபத்தில்  இடம் பெற்றது .

பழைய மாணவர் அமைப்பின் சார்பில் கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.ஆஸாத்  தலைமையில்  இடம் பெற்ற இவ்விழாவில்  தென்கிழக்குப் பல்கலைக்கழக  சிரேஸ்ட விரிவுரையாளர்  கலாநிதி எச்.எம்.எம்.நளீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் .  கௌரவ
அதிதியாக   கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பர்  , வலயக் கல்வி அலுவலக திட்ட உத்தியோகத்தர்  சி.எம்.நஜீப் , லாபீர் வித்தியாலய பிரதி அதிபர் எம்.எல்.எம்.அஸ்ரப் , பகுதி தலைவர் மௌலவி .எம்.ரீ.ஏ.மனாப் ஆகியாகியோரும் கலந்து சிறப்பித்தனர் .

அங்கு மாணவர்களின் கலை நிகழ்வுகளும்  மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம் பெற்றது. அறிவிப்பாளர்  வீ.எம்.மக்பூல்  தொகுப்பில்  நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப் பட்டு  சிறப்பாக நடைபெற்றன .














Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்