மீலாத் நபி சாதனையாளர்க்களுக்கு சாம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தால் பாராட்டு



   சகா.தேவா 
கல்வியமைச்சு கடந்தவாரம் கொழும்பில் நடாத்திய தேசிய மீலாத்துன்நபி விழாப்  போட்டியில் கிழக்குமாகாணம் சார்பில் கலந்துகொண்டு சாதனை படைத்த சம்மாந்துறைவலய மாணவர் இருவரை சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை பாராட்டிக்கௌரவித்தது. 
நேற்று சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் தேசியமட்டத்தில் சாதனை படைத்த ஆரம்ப பிரிவில் குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியைச்     சேர்ந்த மாணவி எம்.சி.பாத்திமா லுக்னா மற்றும் ஆரம்பநிலை பேச்சுப்போட்டியில் 3ஆம் இடம்பெற்ற சம்மாந்துறை தாருல்உலூம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் எம்.எம்.சகீப் அத்னான் ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
வலயக்கல்விபப்ணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல்நஜீம் மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர்  அகமட் கியாஸ்; ஆகியோர் சாதனையாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிவைத்தனர்.
இருமாணவர்களது பெற்றேர்கள் கற்பித்த ஆசிரியைகள் அதிபர்கள் இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் ஹஜ்ஜிமொகமட் உள்ளிட்ட கல்வியியலாளர்கள் கலந்துகொண்டனர்.
வலயத்திற்கான இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் ஹஜ்ஜிமொகமட் விசேடமாக நற் சான்றுப்பதிரம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
வலயத்திற்கான அதிபர்கள் கல்வியியலாளர்கள் அனைவரும் கலந்துகொண்ட விழாவில் இக்கௌரவிப்புவிழா இடம்பெற்றது.





 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது