மாணவர்களுக்கான சீருடை வலயக் கல்விப் பணிப்பாளரினால் பதிவு செய்யப்பட்ட புடவைக் கடைகளில் கொள்முதல் செய்ய முடியும்

சீருடைத் துணிகளுக்கு பதிலாக வழங்கப்படவுள்ள பண வவுச்சர்கள் எதிர்வரும் டிச. 1 ஆம் திகதி சகல அதிபர்களுக்கும் கிடைக்கும் விதத்தில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். 
450 ரூபா முதல் 1000 ரூபா வரையிலான பண வவுச்சர்களுக்காக கல்வி அமைச்சு 26,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என்றும் கூறினார்.
கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் சீருடைக்கு பதிலாக வவுச்சர்கள் வழங்கி அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பாக 98 வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தும் கூட்டம் நேற்று (27) கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர்கள் பணிப்பாளர்களும் கலந்துகொண்டு மேற்படி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விளக்கங்களை அளித்தனர்.
இந்தக் கூப்பன் முறை வலயக் கல்விப் பணிப்பாளர்களால் வழங்கப்படும் தரவுகளுக்கு ஏற்ப பாடசாலை சீருடை துணி அளவுக்கு உரிய கல்வி வவுச்சர்கள் அமைச்சினால் வழங்கப்படும் அதன்படி உரிய வலயத்துக்கு வவுச்சர்கள் கொண்டு செல்லும் திகதி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
டிசம்பர் 1 ஆம் திகதி சகல பாடசாலை அதிபர்களுக்கு இந்த வவுச்சர்கள் வழங்கி பாடசாலை வகுப்பாசிரியர்கள் ஊடாகச் சென்று மாணவர்களுக்கு சென்றடையும். தமது பிரதேசத்தில் வலயக் கல்விப் பணிப்பாளரினால் பதிவு செய்யப்பட்ட புடவைக் கடைகளில் சீருடைகளை கொள்முதல் செய்ய முடியும். மிகுதி பணத்திற்கும் தமக்குத் தேவையான காலணி, பெனியன்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
வவுச்சர்கள் 15 வகையில் பின்வரும் பெறுமதியில் வழங்கப்படுகின்றது.
1 - 5 மாணவர்கள் 450 ரூபா
1 - 5 மாணவியர்கள் 400 ரூபா
1 - 5 மாணவியர்கள் முஸ்லிம் பாடசாலை பர்தா தலைக்கவசம் 600 ரூபா
1 - 5 மாணவியர்கள் சீருடை 720 ரூபா
6 - 9 மாணவர்கள் மேற்சட்டை மற்றும் காற்சட்டை 525 ரூபா
6 - 9 மாணவியர்கள் 500 ரூபா
6 - 9 முஸ்லிம் மாணவியர்கள் 700 ரூபா
6 - 9 மாணவியர்கள் சீருடை 800
10 - 13 மாணவர்கள் 525 ரூபா
10 - 13 மாணவர்கள் 525 ரூபா
10 - 13 கவுன் துணிக்காக 600
10 - 13 முஸ்லிம் மாணவியர்கள் 800 ரூபா
10 - 13 மாணவியர்கள் (லமா சாரி) 1000 ரூபா
1 - 7 துறவற காவி உடை 1300 ரூபா
8 - 13 துறவற மாணவர்கள் 1700 ரூபா
 இங்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் மேலும் கூறுகையில், இலங்கையில் உள்ள 43 இலட்சம் மாணவர்களது சீருடைகள் விடயத்தில் கடந்த காலத்தில் 4 நிறுவனங்கள் பாரிய மாபியா நிதி மோசடிகளை செய்தது. இதனை இலகுபடுத்தும் திட்டமாகவே பிரதம மந்திரி, ஜனாதிபதி அமைச்சரவை அனைவரும் ஏற்றுக்கொண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதனை குழப்பி பல்வேறு அசெளகரியங்களை செய்வதற்கு இந்த 4 நிறுவனங்கள் பல்வேறு மாபியாக்களை ஆரம்பித்துள்ளன. இதற்காக 26000 மில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் துணி வழங்கிய நிறுவனத்தின் 1 மீட்டர் துணிக்கு 165 ரூபா பக்கட் பண்ணுவதற்கு 8 ரூபா போக்குவரத்தும் மற்றும் செலவுக்கு 16 ரூபா அறவிடப்பட்டது.
65 - 35 வர்க்க வகை கொண்ட வெள்ளைத் துணியை நமது பிரதேசத்தில் கடையில் துணியை கொள்வனவு செய்ய முடியும். அந்த துணிக்கடையை வலயக் கல்விப் பணிப்பாளர் அனுமதி வழங்கப்படல் வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது