லகானின் இரத்ததான முகாம்


(முர்சித் அனிபா)

கிழக்கின் முன்னணி விளையாட்டுக்கழகமான நிந்தவூர்  லகான் விளையாட்டுக்கழகம்  ஏட்பாடு செய்த வருடாந்த  இரத்ததான முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம் பெற்றது .  

இந் நிகழ்விற்கு  சுகாதாரப் பிரதி அமைச்சர்    பைசால் காசீம்   பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். அத்தோடு  நிந்தவூர் தள வைத்தியசாலை  மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை வைத்தியர்கள், ஊழியர்கள்,  லகான் விளையாட்டுக்கழக  நிர்வாகிகள் மற்றும் கழக அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இனைந்து நடாத்தப்பட்ட இந்நிகழ்வில்  சுமார் 100க்கு மேற்பட்ட இளைஞர் யுவததிகள் இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது



Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்