கல்முனை வலயக் கல்வி அலுவலக பாவனைக்கு கணணிக்கான பிரிண்டர் வழங்கி வைப்பு

கல்முனை வலயக் கல்வி அலுவலக பாவனைக்கு கணணி பிரிண்டர்  ஒன்று வர்த்தக  கைத்தொழில்  அமைச்சரின்  இணைப்பாளரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளரும் , நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக  அபிவிருத்தி அமைப்பின் தலைவருமான  சீ .எம்.ஹலீம்  அவர்களால்  வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

இன்று (22) வியாழக்கிழமை  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு சென்ற  ஹலீம்  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்  இடம் பிரிண்டரை கையளித்தார் . இதன் போது நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக  அபிவிருத்தி அமைப்பின் செயலாளர் யு.எல்.பாயீஸ்  கலந்து கொண்டார். 




Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்