கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் வனரோபா தேசிய மரநடுகை நிகழ்ச்சி


சுற்றாடல் அதிகார சபையினால்  முன்னெடுக்கப் பட்டுள்ள  "மாணவர் பங்களிப்போடு  வனம் உருவாக்கல்"  வனரோபா  தேசிய  மரநடுகை  நிகழ்ச்சித்  திட்டத்தின் கீழ்  பாடசாலைகளில்  வனத் தோட்டம் அமைக்கும் வேலைத் திட்டம்  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட  கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் இன்று நடை பெற்றது.

கல்லூரி அதிபர்  எம்.சி.எம்.அபூபக்கர்  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.வை .அரபாத்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு  மரக் கன்றொன்றை நட்டு  திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.  நிகழ்வில் ஆசிரியர்கள் ,மாணவர்கள்  கலந்து கொண்டனர் 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது