மக்காவில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை!முஸ்லிம் சமய மத விவகார அமைச்சர் அப்துல் ஹலீம்

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரின் மினா பிரதேசத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் இலங்கையர்கள் எவருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என முஸ்லிம் சமய  மத விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்ந்தும் தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புனித மக்கா நகருக்கு அருகில் செய்தானுக்கு  கல்லெறியும் மினாவில் சன நெரிசலில் சிக்கி சுமார் 710 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று