மண்டூர் மதிதயான் கொலை- எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் 03 பேர் கைது

நாவிதன்வெளி பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தராக கடமையாற்றிவந்த சச்சிதானந்தம் மதிதயான் கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு, மண்டூரில்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று பேரை  ஞாயிற்றுக்கிழமை  கைதுசெய்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
 எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்; பொலிஸார் மேலும் கூறினர். முன்னதாக பட்டிப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின்  முன்னாள் உறுப்பினர் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து மற்றைய இருவரும் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறினர்  மண்டூர் மதிதயான் கொலை- எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின்  முன்னாள் உறுப்பினர் 03 பேர் கைது 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்