புகைத்தல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருட்கள் தவிர்ப்பு தொடர்பாக விழிப்பூட்டும் கருத்தரங்கு



(அப்துல் அஸீஸ்​ )

புகைத்தல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருட்கள்  பாவனை தவிர்ப்பு தொடர்பாக  திவிநெகும பயனாளிகளுக்கு விழிப்பூட்டும் கருத்தரங்கு கல்முனை-01ஆம் பிரிவில் இடம்பெற்றது.

திவிநெகும  தினைக்களத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவினால் வருடம் தோறும் நடைமுறைப்படுத்தி வரும் புகைத்தல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருட்கள்  பாவனை தவிர்ப்பு நடவடிக்கை மற்றும் கொடி தினம் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இக் கூட்டம் இடம்பெற்றது.

 திவிநெகு  அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சபாயாவின் ஒருங்கினைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக கல்முனை திவிநெகும வலய வங்கி  முகாமையாளர் ச.சதீஸ், திவிநெகு சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நெளசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.   


Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்