கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கான போஷாக்கான உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

ஏ.பி.எம்.அஸ்ஹர்


கல்முனை பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கான 20.000ஆயிரம் ரூபா பெறுமதியான போஷாக்கான உணவுப் பொதிகள் வழங்கும் பிரதான நிகழ்வு நேற்று  நடை பெற்றது.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.ரயீஸ் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதி திட்டமி்டல் பணிப்பாளர்  ரீ.மோகனகுமார் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.இஸ்ஸதீன் தாய் சேய் வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.ஏ.சி.எம்.பஸால் பிரதேச செயலக திட்டமி்டல் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.அஸ்ஹர் மேற்பார்வை பொது சுகாதாரப்பரிசோதகர் எம்.என்.எம்.பைலான் உட்படபொது சுகாதாரப்பரிசோதகர்கள்   கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்திர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது