வறிய பிள்ளைகளும் கல்வி பெற உதவும் பெருந்தகை -பரகத்

2015ம் ஆண்டு முதலாம் தரத்தில் சேர்ந்த மாணவர்களுக்கும்,  வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இலவசமாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (22) கல்முனை அஸ்-சுஹறா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அஸ்-சுஹறா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல். அப்துல் கமால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் கடந்த காலங்களில் பெற்றோரை இழந்த, வருமானம் குறைந்த கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பாடசாலை கற்றல் உபகரணங்களும், அப்பியாசப் கொப்பிகளும் வழங்கிவருகின்றமைக்காகவும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கல்லூரியின் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து சிறப்பித்தார்கள்.






Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி