கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் விடுதலை

கல்முனை மாநகர  சபையில் நேற்று ஏற்பட்ட குழப்பம் காரணமாக அம்பாறை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற  நிலையில்  வைத்திய சாலையில்  வைத்து கல்முனை பொலிசாரால் கைது செய்யப் பட்ட கல்முனை மாநகர சபை  உறுப்பினர் ஏ.எம்.றியாஸ்  இன்று  நீதி மன்றால்  விடுதலை செய்யப் பட்டுள்ளார் .  ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப் பட்டதாக  பொலிஸ்  தகவல் தெரிவிக்கின்றன .

இதே வேளை  இன்று காலை  கைது செய்யப் பட்ட  மற்றுமொரு  மாநகர சபை உறுப்பினரான ஏ.நிசார்தீன்  கல்முனை நீதி மன்றால் 75 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப் பட்டுள்ளார் .

நேற்று கல்முனை மாநகர சபையில்  இடம் பெற்ற சம்பவத்தில் காயமடைந்த  மாநகர சபை உறுப்பினர்  பிர்தௌஸ் தொடர்ந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் . 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்