ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரப்போகின்றஜனாதிபதித் தேர்தலில் எடுக்கப்போகின்ற முடிவுதேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்எச்.எம்.எம்.ஹரீஸ் 
(ஹாசிப்யாஸீன்)தென்பகுதியின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதியும்,அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும்நிதியும் மலைக்கும் மடுவுக்கும் ஒப்பானதுஇன்று கட்சிநினைத்தால் பாரிய அபிவிருத்திகள் பற்றிப் பேசலாம்.ஆனால் சமூக விடயத்தை புறந்தள்ளிவிட்டுஎதைப்பற்றியும் சிந்திக்கமுடியாது என திகாமடுல்லமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்கல்முனைத்தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸீன் பலஇலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பொத்துவில் பிரதேசமக்களுக்கும்விளையாட்டு வீரர்களுக்கும்உதவியளிக்கும் சுயதொழில் மற்றும் விளையாட்டுஉபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலைபொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில்  ஹரீஸ் எம்.பிமேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித்தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்றஉறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தொடர்ந்தும்உரையாற்றுகையில்
கடந்த இரண்டு வருடங்களாக இந்நாட்டில்முஸ்லிம்களுக்கெதிரான பல விடயங்கள்நடந்துள்ளது.  முஸ்லிம்களின் இருப்புக்கு ஆபத்துஏற்பட்டு வருவதனால் முஸ்லிம் பாராளுமன்றஉறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம்எழுதினோம்ஆந்தக் கடிதத்தில் ஜனாதிபதியைச்சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கிக் கேட்டிருந்தோம்.ஆனால் இன்றுவரை அதற்கான நேரத்தை ஒதுக்கித்தரவில்லை.
இன்று பாருங்கள் எத்தனையோ வேலைப்பழுவுக்கும்மத்தியிலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு ஜனாதிபதிவிரும்பியுள்ளார்வரவு செலவுத் திட்டத்தைஆரம்பித்து வைத்துவிட்டு ஜனாதிபதி சிரே ஷ்டஅமைச்சர்களிடம் அலரி மாளிகைக்கு முஸ்லிம்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துவாருங்கள் பேசுவோம் என்று கூறியுள்ளார்.
ஆனால் நாங்கள் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும்அலரி மாளிகை சந்திப்பை நிராகரித்து அதற்கானகாரணங்களை தலைவர் ஊடாக அரசுக்குஅறிவித்தோம்எமது கட்சிக்குத் தரப்பட்ட பலவாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லைசிங்களபௌத்த கடும் போக்காளர்கள் முஸ்லிம்களுக்கெதிராகமேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு நடவடிக்கைஎடுக்காமல் அவர்களை போசிக்கும் நிலையில்பேச்சுவார்த்தைக்கு அவசியமில்லை.
பட்டம்பதவிகளுக்கு அப்பால் சமூக பொறுப்புக்களைசுமப்பதுதான் நமது பணியாகும்அலரி மாளிகையில்முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குபல சலுகைகள் காத்திருந்தது.
அபிவிருத்திக்கு கோடிக்கணக்கான ரூபா நிதிதொழில் வாய்ப்புக்கள்பிரதி அமைச்சுப் பதவிவெளிநாட்டுத்தூதுவர்கள்திணைக்களத் தலைவர்கள் என்று பெரும்பட்டியல் ஒன்றே வைத்திருந்தனர்.
நாங்கள் அலரி மாளிகைக்கு போகாததால் அவர்கள்குழப்பமடைந்துள்ளனர்முஸ்லிம் காங்கிரஸைஎவ்வாறு கையாளலாம் என்பது பற்றி அரசின்உயர்மட்டம் இன்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றது.
இந்நாட்டு முஸ்லிம்கள் மிக முக்கியமான சவால்நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்பொதுபல சேனா அமைப்புபர்மாவில் உள்ள தீவிரவாத அமைப்புடனும்,இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ்அமைப்புடனும்தொடர்புகளை ஏற்படுத்தி தனது அங்கத்தவர்களுக்குபயிற்சியை வழங்குகின்றனர்இதன் மூலம்முஸ்லிம்களை அழித்து தங்களது தீவிரவாதத்தைநிலைநாட்டக் கங்கனம் கட்டியுள்ளனர்.
அரசும்பொறுப்பாளர்களும் இன்று மௌனம்காக்கின்றனர்எறிகின்ற நெருப்பில் எண்ணையைஊற்றுவது போன்று தீவிரவாத அமைப்புக்கள் சர்வதேசரீதியாக ஒன்றிணைந்து நமது மக்களை நசுக்குவதற்குமுற்பட்டுள்ளனர்மக்களால் எங்களுக்குத் தரப்பட்டஇந்தப் பாராளுமன்ற உறுப்பினர்  பதவி எனும்அமானிதத்தை காப்பாற்றுகின்றவர்களாக இருந்துவருகின்றோம்.
மக்களின் உணர்வோடு வாழ்கின்றவர்கள் என்றஅடிப்படையில் மாமூல் அரசியலுக்கு நாங்கள்ஆட்பட்டவர்கள் இல்லை. 2001ம் ஆண்டு நான் நேரடிஅரசியலுக்கு வந்தபோது அன்று என்ன சவால்கள்இருந்ததோ இன்றும் சவால்கள் இருக்கின்றதுஎந்தசலுகைகளுக்கும் சோரம் போகாமல் சமூகத்தின்இருப்பிற்காக எங்களை அர்ப்பணித்துள்ளோம்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  பாரிய அபிவிருத்திகள்பற்றிப் பேசலாம்இன்று நாங்கள் செய்யும்அபிவிருத்திகளை விட பல மடங்கு கோடிக்கணக்கானரூபாய்க்களை கொண்டு வரலாம்ஆனால் நமதுசமூகம் எதிர்நோக்கும் மிகப் பெரும் ஆபத்துக்களைசிந்திக்காமல் அபிவிருத்தி எனும் வட்டத்திற்குள்அகப்பட முடியாது.
அழுத்கம சம்பவத்தின்போது நமது தாய்மார்கள் பட்டவேதனை சொல்லவே முடியாதுஉடமைகளையும்,உயிர்களையும் இழந்து தவிர்த்த முஸ்லிம்கள் எந்தப்பாதுகாப்பும் இல்லாமல் தமது சொந்த மண்ணில்ஒளிந்து கொண்டு இரவுகளைக் கழித்தார்கள்.
அளுத்கம சம்பவத்தில் முதன் முதலாக நாங்கள்சென்றபோது அந்த மக்களின் உணர்வுகளோடு என்னைஆட்படுத்திக் கொண்டேன்பல விடயங்களில் மிகதைரியமாகக் குரல் கொடுத்தேன்.
வழிபாட்டுத்தளங்கள் உடைக்கப்பட்டபோதுஉருப்படியான தண்டனைகள் வழங்கப்படாத நிலையில்சமூகத்திற்கான வழிகாட்டுதல்களை எப்படி செய்யப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரப்போகின்றஜனாதிபதித் தேர்தலில் எடுக்கப்போகின்ற முடிவுதேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது.
கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர்அட்டாளைச்சேனையில் நடைபெற்ற கூட்டத்தில் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்நாட்டின் இன்றையபோக்கு எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு பாரியசிக்கல்களை ஏற்படுத்தும்தங்களின் தீவிரவாதத்தைகட்டவிழ்த்துவிட்டு பர்மாவில் நடந்தது போன்றுநிகழ்ச்சிகள் அரங்கேர பார்க்கின்றார்கள்.
இன்று பல கட்சிகளும் தங்களது முடிவுகளைஎடுத்துவிட்டதுஆனால் முஸ்லிம் காங்கிரஸ்தீர்மானம் எடுப்பதில் மிகப்பெரும் சிக்கலைஎதிர்கொண்டுள்ளதுசமூகத்திற்காக பாடுபடும் கட்சிஎன்ற அடிப்படையில் முடிவுகளை நினைத்தவாறுஎடுக்க முடியாது.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது எமதுகட்சிக்கு வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் இன்னும்நிறைவேற்றப்படவில்லைஅது தொடர்பில் அவர்களதுபதில்களை எழுத்து மூலம் கோரியுள்ளோம் என்றார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண நபை உறுப்பினர்.எல்.எம்.நஸீர்பிரதேச செயலாளர் முஸர்ரத்உதவித்தவிசாளர் .ல்.தாஜூதீன்சபை உறுப்பினர்கள் மற்றும்பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது