பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் சுய தொழிலுக்கான தையல் இயந்திரங்களும் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன

பி. முஹாஜிரீன்

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு  செலவுத் திட்ட நிதியிலிருந்து ரூபா 30 இலட்சம் நிதியொதுக்கீட்டில் பொத்துவில் பிரதேசத்தில் சுயதொழில் உபகரணங்களும் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம் வழங்கும் வைபவமும் புதன்கிழமை நடைபெற்றது.
பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஸித் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வைபவத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தெரிவு  செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இதில் சுமார் 20 பயனாளிகளுக்கு சுய தொழிலுக்கான தையல் இயந்திரங்களும் 13 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எல். தாஜூதீன், பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.எம். முஸர்ரப் உட்பட பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று