அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக விதை நெல் வழங்கப் படும்


அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஜனாதியின் கட்டளைக்கு அமைவாக நிவாரணமாக விதை நெல் வழங்கப் படும் என்று விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். நேற்று காரைதீவூ பிரதேச செயலகத்துக்குட்பட்ட விவசாயப் பிரதி நிதிகளை அமைச்சர் தலைமையிலான குழுவினர் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

தோழில் மற்றும் தொழில்உறவூ பிரதி அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவின் இணைப்பாளர் ஏ.எம். ஜாஹிரின் அழைப்பின் பேரில் வருகை தந்த விவசாய அமைச்சர் மாளிகைக்காடு அல்- ஹூசைன் வித்தியாலயத்தில் விவசாயப் பிரதிநிதிகளைச் சந்தித்து விவசாயிகளின் குறைகளைக்கேட்டறிந்தார். விவசாயத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளால் விவசாயிகளின் குறைபாடுகள் அமைச்சருக்கு எடுத்துக் கூறப்பட்டது. 

இதன் போதே வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த போகம் நெற் செய்கைக்கான விதை நெல் நிவாரணமாக வழங்கப் படும் என தெரிவித்த போது ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் விவசாயிகள் நன்றியை தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன உட்பட மாகாண சபை உறுப்பினர் டீ.வீரசிங்க உட்பட அமைச்சு அதிகாரிகளும்இ விவசாயத் திணக்கள முக்கியஸ்தர் பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்கள் மாளிகைக்காடு அல்- ஹூசைன் வித்தியாலயத்தில் மரக்கன்றுகளும் நட்டு வைத்தனர்.




Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்