வாழ்வாதார பயிற்சியில் பங்குபற்றியோருக்கு சான்றிதழ்


கிழக்கு மாகாண முதலமைச்சின் நிதியில் கிராம அபிவிருத்தித் திணைக்களம் நடாத்திய வாழ்வாதாரப் பயிற்சி நெறிகளில் கலந்து கொண்ட யுவதிகள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் . அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் கே. அருந்தவராஜா உரையாற்றுவதையும், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ. எல். ஏ. அஸீஸ். அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எச். கலீலுர் ரஹ்மான் ஆகியோர்  சான்றிதழ் வழங்குவதையும், நிகழ்வில் கலந்து கொண்டயுவதிகளையும் படங்களில் காணலாம்

Comments