ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை அரசுபுறக்கணித்ததால் எம்மை நாடுகின்றனர் -தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சி உறுப்பினர்கள்

நாளை கல்முனையில் இடம் பெறவுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  மற்றும் தமிழ் தேசிய கூட்டமைக்கும் இடையிலான சந்திப்பில் தமிழரசுக் கட்சி சார்ந்த உறுப்பினர்களை தவிர மற்றைய கட்சி அங்கத்தவர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என நம்பகமாக அறிய முடிகின்றது.

தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விரும்பவில்லை என அறிய முடிகின்றது . இதனால்  தமிழரசுக் கட்சிக்கும் மற்றைய கட்சி உறுப்பினர்களுக் குமிடையே குழப்ப நிலை தோன்றியுள்ளதாக அறிவிக்கப் படுகின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை அரசு புறக்கணித்ததன் பின்னர் எம்மை நாடுவதாகவும்  இதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர் . இந்த குழப்பநிலை காரணமாக நாளை நடை பெறவுள்ள சந்திப்பு பிற்  போடப்படலாமென எதிர்பார்க்கப் படுகின்றது . 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்