கல்முனை வலய உலக சமாதான தின நிகழ்வு

கல்முனை கல்வி வலய உலக சமாதான தின நிகழ்வு நேற்றுத் திங்கட்கிழமை நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் பாடசாலை கலாநிதி அஷ்ரப் மண்டபத்தில் நடைபெற்றது. 


கல்முனை வலய சமாதானக் கல்வியதிகாரி எம்.ஏ.எம். றஸீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றகீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் சமாதான தினம் தொடர்பான சிறப்புரையும் ஆற்றினார். 

நிகழ்வில் கல்வி அதிகாரிகள் பலர் உட்பட ஆசிரியர்கள், பாடசாலை தமிழ், முஸ்லிம் மாணவியர்கள் பெருந்தொகையில் கலந்துகொண்டனர். சமாதான தின போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவியர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன. சமாதானம், பரஸ்பர இன செளஜன்யம் அற்றுப் போயுள்ள இக்கால கட்டத்தில் சமாதானத்தின் முக்கியத்துவம் உணர்ந்து செயற்படவேண்டுமென பிரதம அதிதி தமது சிறப்புரையில் கூறினார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்