முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் நாளை கல்முனை மாநகரில் முக்கிய சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலானமுக்கிய சந்திப்பு ஒன்று நாளை சனிக்கிழமை கல்முனை மாநகர சபை மேயர் அலுவலகத்தில் இடம்பெறவிருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சித் தலைவரும்அமைச்சருமான ரவூப் ஹக்கீம்,செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸனலிபிரதி செயலாளரும்கல்முனை மாநகர மேயருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர்சிரேஷ்ட பிரதித் தலைவரும்கல்முனை மாநகர உறுப்பினருமான ஏ.எல்.மஜீத் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்தமிழரசுக்கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜாகூட்மைப்பின் பேச்சாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம ஹென்றி மகேந்திரன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்