கல்முனை மாநகர சபையின் இப்தார் வைபவம்!

கல்முனை மாநகர சபையின் வருடாந்த இப்தார் நிகழ்வு, மாநகர சபை வளாகத்தில் சிறப்புற நடைபெற்றது. 
கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் வை.எல்.சலீம் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். 
தமிழ், முஸ்லிம் இன நல்லுறவுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்த இந்த இப்தார் நிகழ்வில், மாநகர சபையின் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபையின் தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். நிகழ்வின் இறுதியில் விசேட துஆபிரார்த்தனையும் இடம்பெற்றது. 



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது