கல்முனைக்குடியில் ஆட்டோ எரிந்து நாசம்

 கல்முனை  பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட கல்முனை குடி சாஹிபு வீதியில்  உள்ள வீடொன்றில் இன்று  திங்கட் கிழமை அதிகாலை 2.15 மணிக்கு வீட்டில் தீ பிடித்த சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது . இதன் போது  QA -0317 இலக்க  முச்சக்கர வண்டியொன்றும், 03 துவிச்சக்கர வண்டிகளும் எரிந்து நாசமாகியுள்ளன .

வீட்டில் உள்ளவர்கள்  ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரமே இந்த சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. கணவர் வெளிநாட்டில் தொழில் புரிபவர் என்றும்  தனது மகன் முச்சக்கரவண்டி ஓட்டுபவர் என்றும் உதுமாலெப்பை சபீனா என்பவர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் . 




சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணை செய்கின்றனர் 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்