நான் பிறந்த மண்ணே ...

நான் பிறந்த மண்ணே ... 

நாட்களின் புது வரவுகளில்
நான் பிறந்த மண்ணின் உறவுகளுக்கு
நலமறிய ஸலாமுரைத்து
நற் செய்திகள் பரிமாறி
தொலைத் தொடர்புகளால்
விடைபெறுவதென் வழக்கம்

அன்றும்... வழமைபோல் ஆவலுடன்
மௌனத்தில் ஓடிய நிமிடங்கள் நீண்டது
மணித்தியாலங்களை
காலம் விழுங்கிச் செல்ல
என்னவென்றறிந்திட
ஏது செய்யலாமென
உண்ணாதுறங்காதிருந்தேன்

மறுநாள்....
துவக்குச் சட்டத்தால் அடக்கியதும்
வன் செயலால் முடக்கியதும்
வாழ்வாதாராங்கள் எரிந்து சாம்பலாகியதும்
கல்லடிகளால் உடைத்;து நொறுக்கியதும்
மஸ்ஜிதுகளை காத்திடும்
இறைவழிப் போர் களத்திறங்கிய
சகோதர உயிர்கள்
சஹீதாகிப் போனதும் துன்பியல் வரலாறாக - என்
செவிகளுக் கெட்டியது

அறுத்த கோழியைப் போல் துடித்தது - என்
உள்ளமும் உணர்வுகளும்
சீர்குலைக்கப்பட்ட - என்
பிறந்த மண்ணே - உன்
எழிலை கண்களுக்குள் 
விழித்த கனவுகளாய்
சீர்தூக்கிப் பார்க்கிறேன்

மௌன விரதம் பூண்டு
மெல்ல நடந்து சென்று 
பாத்திரமேந்தி கேட்டுப் புசிக்கும்
ஆசைகள் துறந்த
(அப்) பாவிகளா... நம்
அடையாள ஆவணங்களை
கொள்ளையடித்து
காவிச்சென்றது
கூலிச் சைத்தான்களை
கூட அழைத்து வந்த
காவி (யவர்) கள்
அல்லாஹ்வின் தீர்ப்புகளைக்
காவிக் கொள்ளட்டும்

சூழ்ச்சிக்காரர்களுக் கெல்லாம் - பெரிய
சூழ்ச்சிக்காரன்
`அல்லாஹ் ' விடம் கையேந்துங்கள்
ஐந்து வக்திலும் தவறாது தொழுங்கள்
நோன்புகளை நோற்று மன்றாடுங்கள்
நல்லவராய் அவர்கள் திருந்தட்டும்
அன்றேல் ....
அல்லாஹ்வின் சாபத்துக்குள்ளாகட்டும்


கவிதையாக்கம்   தர்ஹாவூர் நூர்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது