மாவடிப்பள்ளி கமு/அல் -அஷ்ரப் மகா வித்தியாலயத்துக்கு தேசிய பசுமை விருது



 மத்திய  சுற்றாடல் அதிகார சபையினால் வருடந்தோறும் நடாத்தப்படுகின்ற  " தேசிய பசுமை " விருதுக்கான  2013/2014 போட்டித்தொடரில்  கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி கமு/அல் -அஷ்ரப் மகா வித்தியாலயத்துக்கு  வெண்கல விருது கிடைக்கப் பெற்றுள்ளது.

கடந்த 2010/2012 ஆம் வருடமும் இப்பாடசாலை திறமை விருதினை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக இவ்விருதினை பெற்ற இப் பாடசாலை  அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீனை பாராட்டும் நிகழ்வு  இன்று (13) கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் நடை பெற்றது .

வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதிக் கல்விப்    பணிப்பாளர்  ஐ.எல்.ஏ.ரஹீம்,கணக்காளர்  எல்.ரீ .சாலிதீன் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்



Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்