இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக 9 ஆவது பட்டமளிப்பு விழா


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை, பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இந்தப் பொதுப் பட்டளிப்பு விழாவின் ஆரம்பத்தில் மூவின கலாசார நிகழ்வுகள் சகிதம் பல்கலைக்கழக வேந்தர் ஊர்வலம் இடம்பெற்றபோது பட்டம் பெறும் மாணவர்கள் மற்றும் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில் மற்றும் அதிதிகள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். 

பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அச்சி முஹம்மட் இஸ்ஹாக் பட்டமளிப்பு விழாவைத் தொடக்கி வைத்ததுடன், பட்டம் பெறும் மாணவ, மாணவியருக்கான சத்தியப் பிரமாணமும் செய்து வைத்த அதேவேளை பட்டங்களையும் வழங்கினார். 




இதேவேளை விழாவில் நிதி திட்டமிடல், மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளரும், திறைசேரி செயலாளருமான கலாநிதி பீ.பி.ஜெயசுந்தர பட்டமளிப்பு விழா சிறப்புரையும் ஆற்றினார். மேலும் இப்பொதுப்பட்டமளிப்பு விழாவையொட்டி ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிவான் சீ.ஜி.வீரமந்திரி ஆகிய இருவருக்கும் கௌரவ கலாநிதி பட்டங்களும் வழங்கப்பட்டன. அதேவேளை கலை, கலாசார பீடம், வர்த்தக முகாமைத்துவம், பிரயோக விஞ்ஞானம், அரபு, இஸ்லாமிய கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகளென 470 பேர் பட்டங்களைப் பெற்றனர். இந்த நிகழ்வில் பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர் -

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது