கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய ஹாசிமின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு



கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய யூ.எல்.எம்.ஹாசிமின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. 
கல்முனை வலயக்கல்வி பணிமனைகுட்பட்ட கல்விச் சமூகத்தின் ஏற்பாட்டில் பிரதிக் கல்விப்பணிப்பாளர் வீ.மயில்வாகனம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.நிஸாம் பிரதம அதிதியாகவும் மற்றும் பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




இதன்போது கல்முனை வலயக்கல்வி பணிமனைகுட்பட்ட கல்விச் சமூகத்தினரால் யூ.எல்.எம்.ஹாசிமின் சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னமும் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 
இந்நிகழ்வில் புதிதாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையேற்றுள்ள எம்.எஸ்.ஏ.ஜெலீலும் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்