கல்முனை மாநகரசபையில் 50க்கு மேற்பட்டோருக்கு நிரந்தர நியமனம்

 - மேயர் நிசாம் காரியப்பர் 
கல்முனை மாநகர சபையின் இம்மாதத்துக்கான சபை அமர்வு    (2014-02-11) இடம்பெற்றது.
இன்றைய சபை அமைவின்போது முதல்வர் நிசாம் காரியப்பர் விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக,
நீண்ட காலமாக நிரந்தரமாக்கப்படாமல் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக
அடிப்படை ஊழியர்களின் நிரந்தர நியமனம் சம்மந்தமான அறிக்கை ஒன்றை சபைக்கு தெரியப்படுத்தினார்.
இதன்போது கடந்த காலங்களில் கல்முனை முதல்வர்களாக செயட்பட்டவர்களின்
முயற்சியைத் தொடர்ந்து

தானும் எடுத்துக்கொண்ட பாரிய முயற்சியின் ஊடாகவும், மாகாண
சபையின் சம்மந்தப்பட்ட செயலாளர்களின் ஒத்துழைப்புடனும் இந்த நியமனங்களைப்பெற
முடிந்ததாகவும், அதில் சுகாதார ஊழியர்கள் 28 பேரும், களவேலையாட்கள் 8 பேரும்,
வெல்டர் ஒருவரும், பார இயந்திர இயக்குனர் ஒருவரும், கவலாளிக்களும் மற்றும் கடமையாற்றும்
அனைத்து சாரதிகளுமாக ஐம்பதுக்கு
மேற்பட்டோர் இம்மாதத்திற்குள் நிரந்தர நியமனங்களைப் பெற உள்ளதாக தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்