18ஆவது சார்க் மாநாடு நேபாளில்






18ஆவது சார்க் மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் நேபாளில் நடைபெறவுள்ளது.

மாலைதீவில் நடைபெற்ற சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் 35ஆவது மாநாட்டில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் இலங்கை - இந்தியா- பங்களாதேஷ்- பூட்டான்- மாலைதீவு- பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் நேபாள பிரதிநிதிகள் குழுவுக்கு சங்கர் தாஸ் பயராஹி தலைமைத் தாங்கினார்.

வர்த்தகம்- முதலீடு- வறுமையை ஒழித்தல்- எரிசக்தி- உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக இந்த வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது.

2014 மார்ச் முதலாம் திகதி தொடக்கம் மூன்று வருடங்களுக்கு சார்க் பொதுச்செயலாளராக நேபாள் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் அர்ஜூன் பகதூரை நியமிக்க இம்மாநாட்டில் அனுமதி வழங்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி