ஜனாதிபதியின் அனுமதியின்றி கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து எந்த தீர்மானமும் மேற்கொள்ள முடியாது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதியின்றி கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து எந்த தீர்மானமும் மேற்கொள்ள முடியாது என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தமிழ் பிரதேச செயலகம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரிற்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் அனுமதியின்றி கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து எந்த தீர்மானமும் மேற்கொள்ளமாட்டேன் என உறுதியளித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்