புதிய பிரதி அமைச்சர்களாக ஒன்பது பேர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் புதிய பிரதி அமைச்சர்களாக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (10ம் திகதி) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்தப்  பதவிப்பிரமாண நிகழ்வு இன்று முற்பகல்  ஜனாதிபதி செயலகத்தில்  நடைபெற்றது.

தபால் சேவைகள் பிரதியமைச்சராக சனத் ஜயசூரியவும்  கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக லக்க்ஷ்மன் வசந்த பெரேரா பதவி பிரமாணம் செய்தனர்.

அவ்வாறே, தொழில் பிரதியமைச்சராக சரத் வீரசேகரவும், விவசாய பிரதியமைச்சராக வை.ஜீ.பத்மசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதியமைச்சராக ஹேமால் குணசேகரவும், தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி பிரதியமைச்சராக விக்டர் பெரேராவும் பிரதி கல்வியமைச்சராக மொஹான் லால் கிரேருவும், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு பிரதியமைச்சராக நிஷாந்த முத்துஹெட்டிகமவும், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சராக சரத் முத்துகுமாரனவும் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு