யானைக்கு வெளிச்சம் கல்முனை மேயர் நடவடிக்கை

(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் பணிப்புரைக்கு அமைய சாய்ந்தமருது பொலிவேரியன் பிரதேசத்தின் பின்புறத்தில் வெளிச்சம் கூடிய போகஸ் லைட்கள் இன்று (28.10.2013) மாலை பொருத்தப்பட்டது.

மேற்படி லைட்களை பொருத்தும் வேலை மேயர் சிராஸின் மேற்பார்வையில் நடைபெற்றது.


பொலிவேரியன் பிரதேசத்தின் பின்புற வயல்வெளி வழியாக இரவு நேரங்களில் யானைகள் வருவதனாலும் அப்பிரதேசம் இருள் சூழ்ந்து காணப்படுவதனாலும் பிரதேச மக்கள் பீதியுடன் வசிப்பதாக மேயருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக அப்பிரதேசத்திற்கு நேற்று முன்தினம் (26.10.2013)  நேரில் சென்று பார்வையிட்டபோது மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக மேற்படி லைட்கள் பொருத்தப்பட்டது.



Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்